நோயாளி உயிரிழப்பு - மருத்துவர் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட காமராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட காமராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பணியில் இருந்த பெண் மருத்துவர் பிரபாவை தாக்கியதாக கூறப்படுகிறது . இதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரியும் , மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் , பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story