நோயாளி உயிரிழப்பு - மருத்துவர் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட காமராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நோயாளி உயிரிழப்பு - மருத்துவர் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட காமராஜ்  என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பணியில் இருந்த பெண் மருத்துவர் பிரபாவை தாக்கியதாக கூறப்படுகிறது . இதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரியும் , மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் , பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்