மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலம்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 1008 கலசாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 1008 கலசாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அம்மனுக்கு உகந்த பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆடிப்பூர விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 1008 கலசங்கள் வைக்கப்பட்டு யாகங்கள் நடத்தப்பட்டன. பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story