அத்திரவரதர் குறித்து தொடரப்பட்ட 6 வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்திரவரதர் குறித்து தொடரப்பட்ட 6 வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
அத்திரவரதர் தரிசனத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மயக்கமடைவதை தடுக்க ஏர் கூலர் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 6 வழக்குகள், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பக்தர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுத்துள்ளதாகவும், பாதுகாப்பிற்கு ஐந்தாயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்