உயர்மின் அழுத்தகோபுரம், எரிவாயு குழாய்பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு : கோவை உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

தமிகத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயர்மின் அழுத்தகோபுரம், எரிவாயு குழாய்பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு : கோவை உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு
x
தமிகத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டம் மற்றும் கோவை முதல் பெங்களூர் வரை விளைநிலங்கள் வழியாக கெயில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் உள்பட விவசாயிகளை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஜந்தர் மந்தர் சென்று தமது ஆதரவை தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகள் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்