வேலூரில் முகவரி இல்லை, சொத்துக்கள் உள்ளன - கதிர் ஆனந்த் பேச்சுக்கு ஏ.சி.சண்முகம் பதில்

முகவரி இல்லை என்றாலும், வேலூரில் தமக்கு சொத்துகள் இருப்பதாக, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
வேலூரில் முகவரி இல்லை, சொத்துக்கள் உள்ளன - கதிர் ஆனந்த் பேச்சுக்கு ஏ.சி.சண்முகம் பதில்
x
முகவரி இல்லை என்றாலும், வேலூரில் தமக்கு சொத்துகள் இருப்பதாக, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். ஏ.சி. சண்முகத்திற்கு வேலூரில் முகவரி கிடையாது என்றும் அவர் பக்கத்துக்கு தொகுதியை சேர்ந்தவர் என்றும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த  ஏ.சி. சண்முகம், தாம் பக்கத்துக்கு தொகுதியை சேர்ந்தவனாக இருந்தாலும், வேலூர் மக்களின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். மேலும் வேலூரில் முகவரி இல்லை என்றாலும், சொத்துக்கள் இருப்பதாக ஏ.சி.சண்முகம் கூறினார். மத்திய அரசின் ஆதரவு இருப்பதால், தமக்கு மட்டும் தான் திட்டத்தை பெற்று தர முடியும் என்று ஏ. சி. சண்முகம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்