இரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்
x
குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில்  பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், கிராம பகுதிகளுக்கு காட்டுயானைகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் தூதூர்மட்டம் கெரடாலீஸ் பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் நுழையும் 3 காட்டு யானைகள், அங்கு 7 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சவ்சவ் மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றன. காட்டுயானைகளால் இரவில் தூக்கத்தை தொலைத்துள்ள அப்பகுதி மக்கள், யானைகளை நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்