கள்ளக்காதலை கண்டித்த கணவர்- ஹீட்டரால் சூடு போட்ட மனைவி

ஒசூர் அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவரை, மனைவி தனது நண்பர்களோடு சேர்ந்து ஹீட்டரால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதலை கண்டித்த கணவர்- ஹீட்டரால் சூடு போட்ட மனைவி
x
ஒசூர் அருகே பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் சின்னராஜ். இவருக்கு ஜோதி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜோதிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும், இதனால், அடிக்கடி செல்போனில் அவர் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜோதியை சின்னராஜ் கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோதி தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவர் சின்னராஜூக்கு ஹீட்டரால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வலியில் அவர் அலறி துடித்துள்ளார். இதையடுத்து ஜோதி உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பி ஒடி விட்டதாக கூறப்படுகிறது. சின்னராஜின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்