திருவண்ணாமலை : போலீசார் வாகனம் மோதி போதை இளைஞர் காயம்
காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற ஆயுதப் படை போலீசாரின் வாகனம் மோதியதில் போதையில் வாகனம் ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் காயமடைந்தார்.
காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற ஆயுதப் படை போலீசாரின் வாகனம் மோதியதில் போதையில் வாகனம் ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் காயமடைந்தார். மங்கல் கூட்ரோடு என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. போலீசாரின் வாகனத்த்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், அதில் இருந்த மகளிர் போலீசார் மற்றும் வாகனத்தை ஓட்டிச் சென்ற ஆண் போலீஸ் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story