தாழ்வான மின்கம்பி... மாணவியின் கை, கால்கள் கருகியது...

தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி, சிறுமியின் கை மற்றும் கால்கள் கருகியது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தாழ்வான மின்கம்பி... மாணவியின் கை, கால்கள் கருகியது...
x
தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி, சிறுமியின் கை மற்றும் கால்கள் கருகியது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கன்னிமாரர் நகரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் வீடு அருகே, அமைக்கப்பட்டு இருந்த மின் ஒயர் தாழ்வாக இருந்துள்ளது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற 11ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் ஜோதிமணி, மின் ஒயர்களில் சிக்கினார். இதில், கைவிரலும், கால்களும் கருகின. உடனடியாக மாணவியை மீட்ட அவரது பெற்றோர், தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவியின் கை, கால் கருகியது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்