ராயப்பேட்டை மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு விவகாரம் -புதுச்சேரியில் தஞ்சமடைந்த வடமாநில கொள்ளையன் கைது

சென்னையில் திருடிவிட்டு தப்பிய வடமாநில கொள்ளையனை, 60 சி.சி.டி.வி. கேமராக்களின் உதவியுடன் புதுச்சேரியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
ராயப்பேட்டை மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு விவகாரம் -புதுச்சேரியில் தஞ்சமடைந்த வடமாநில கொள்ளையன் கைது
x
சென்னை ராயப்பேட்டையில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி, தங்கச் சங்கிலியை பறித்த கொள்ளையன் உடனடியாக மாயமானான். இது தொடர்பான புகாரின் பேரில் ஆய்வு செய்த போலீசார், ராயப்பேட்டையில் இருந்து வடபழனி, மதுரவாயில் மேம்பாலம் வழி செங்கல்பட்டு, விக்கரவாண்டி, திண்டிவனம், வழியாக ஆரோவில் சென்று புதுச்சேரிக்குள் நுழைவது வரை கண்டுபிடித்தனர்.160 கிலோ மீட்டர், 60 சி.சி.டி.வி.  கேமரா பதிவுகளை எடுத்த போலீசார், புதுச்சேரியில் சி.சி.டி.வி. கேமரா இல்லாததால், அவனை பிடிக்க முடிவில்லை. இந்நிலையில், அங்குள்ள போலீசாரிடம் விவரம் கூறிவிட்டு வந்தனர். இதனிடையே, புதுச்சேரியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஒருவனை பிடித்த போலீசார், தமிழக போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், தொடர் கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில், கொல்கத்தாவை சேர்ந்த ஜான்சன் தத் என்பதும், சென்னை சைதாப்பேட்டையில் மூதாட்டியிடம் நகை பறித்தது இவன்தான் என்பதும் தெரிய வந்தது.

Next Story

மேலும் செய்திகள்