110 சவரன் தங்க நகை திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபர்களை தேடும் போலீஸ்

நெல்லையில் கல்லூரி ஊழியர் ஒருவர் வீட்டில் மர்ம நபர்கள் 110 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
110 சவரன் தங்க நகை திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபர்களை தேடும் போலீஸ்
x
நெல்லை மாவட்டம்  பணகுடி அருகே உள்ள சங்கு நகர் பகுதியில் வசித்து வருபவர் விபின் . இவர் கடந்த 13 ம் தேதி இரவு மனைவியை பார்க்க சென்ற போது வீட்டில் வைத்திருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன,இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் பணகுடி போலீசார், சிசிடிவி காட்சியில் உள்ள மர்ம நபர்கள் குறித்து பொதுமக்கள் துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படுமென அறிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்