மூங்கிலாத்தம்மனுக்கு கிடா வெட்டி படையல் - மழை பெய்ய கிராம மக்கள் வேண்டுதல்

திருவள்ளூர் அருகே மழை பெய்ய வேண்டி வீட்டுக்கு வீடு கிடா பலியிட்டு அம்மனுக்கு நூதன வழிபாடு நடத்தினர்.
மூங்கிலாத்தம்மனுக்கு கிடா வெட்டி படையல் - மழை பெய்ய கிராம மக்கள் வேண்டுதல்
x
திருவள்ளூர் அருகே மழை பெய்ய வேண்டி வீட்டுக்கு வீடு கிடா பலியிட்டு அம்மனுக்கு நூதன வழிபாடு நடத்தினர். விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள அரும்பாக்கம் கிராமத்தில், கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் விவசாயம் செய்ய
முடியாமல் கிராம மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில் மூங்கிலாத்தமனுக்கு, கிடா வெட்டி படையலிட்டால் மழை பெய்யும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. எனவே, கிராம மக்கள் ஒன்றிணைந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். அம்மன் கிராமம் முழுவதும் சுற்றி வருவதற்குள் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பொழிந்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்