ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மாணவன் : அரசு பள்ளியில் சேர்க்கை வழங்க கோரிக்கை

பெரம்பலூர் அருகே ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, அரசு பள்ளியில் சேர்க்கை வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மாணவன் : அரசு பள்ளியில் சேர்க்கை வழங்க கோரிக்கை
x
பெரம்பலூர் அருகே ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, அரசு பள்ளியில் சேர்க்கை வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் விஜய், ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் பள்ளியில் சேர்க்கை வழங்க கொளக்காநத்தம் அரசு மேல்நிலை பள்ளி நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளியில் சேர்க்கை வழங்க கோரி விஜய் மற்றும் அவரது அத்தை ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்