4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் - காவல் ஆணையரிடம் சிறுமியின் தந்தை மனு

சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் ராணுவ வீரரின் மகன், தம்மை மிரட்டுவதாக சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் - காவல் ஆணையரிடம் சிறுமியின் தந்தை மனு
x
சென்னை திருமுல்லைவாயலில் கடந்த ஜூன் 28-ம் தேதி 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து,கொலைசெய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது போக்சோ மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை, சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், புகாரை வாபஸ் பெறுமாறு கைதானவரின் மகன் தங்களை மிரட்டுவதாக தெரிவித்தார்.மேலும், இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்