தொரப்பள்ளி பகுதியில் கும்கி யானைகள் ரோந்து

தொரப்பள்ளி பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை பிடிக்க முதுமலையில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
தொரப்பள்ளி பகுதியில் கும்கி யானைகள் ரோந்து
x
நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை பிடிக்க, முதுமலையில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.தொரப்பள்ளியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை தாக்கியதில்,இருவர் படுகாயமடைந்தனர். அதனை தொடர்ந்து யானையை விரட்ட வனத்துறைக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் அப்பகுதிக்கு, முதுமலையில் இருந்து விஜய்,முதுமலை ஆகிய இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.அத்துடன் கிராமத்தை சுற்றி அகழி வெட்டப்பட்டு, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்