தனியார் பள்ளிக்கு நிலத்தின் உரிமையாளர் பூட்டு : கதவை உடைத்து பெற்றோர்கள் போராட்டம்

சென்னை மதுரவாயல் அருகே தனியார் பள்ளிக்கு நிலத்தின் உரிமையாளர் பூட்டு போட்டதால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளிக்கு நிலத்தின் உரிமையாளர் பூட்டு : கதவை உடைத்து பெற்றோர்கள் போராட்டம்
x
சென்னை மதுரவாயல் அருகே தனியார் பள்ளிக்கு நிலத்தின் உரிமையாளர் பூட்டு போட்டதால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெற்குன்றம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு வழக்கம் போல் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்துள்ளனர் ,ஆனால், பள்ளி கேட் மூடப்பட்டு இருந்தது. மேலும் பள்ளியினுள் இருந்தவர்கள் பள்ளி இனி இயங்காது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளியின் கேட்டை உடைத்து உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். . தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் பள்ளி நிர்வாகம் நிலத்தை 10 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்ததும், தற்போது கால அவகாசம் முடிந்துவிட்டதால் பள்ளியை நில உரிமையாளர்கள் பூட்டி விட்டதும் தெரியவந்தது. ஒரு வாரத்திற்குள் பிரச்சினையை தீர்ப்பதாக பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்