நகைக்கடை ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை
நகைக்கடை ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் நகைக்கடை ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். அதிகாலையில் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story