ஓமலூரில் நகைக்கடையில் விசாரிக்க சென்ற போலீசாரிடம் மக்கள் வாக்குவாதம்
ஓமலூரில் நகைக்கடையில் சோதனையிட்ட போலீசார் மீது சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூரில் நகைக்கடையில் சோதனையிட்ட போலீசார் மீது சந்தேகம் அடைந்த பொதுமக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொளத்தூரில் பல இடங்களில் 27 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தங்கமணி, குமரேசன்,சரவணக்குமார் ஆகியோரை பிடித்து, அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருடிய நகைகளை ஓமலூர் அருகே நாச்சினாம்பட்டி என்ற பகுதியில் உள்ள நகைக்கடையில் விற்றதாக அவர்கள் கூறியதால், அங்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே போலீசார் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், உள்ளூர் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல், கடைக்குள் எப்படி சோதனையிடலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு அவர்கள் அம்பத்தூர் போலீசார் தான் என்பதை உறுதி செய்தனர். இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது.
Next Story