உளுந்தூர்பேட்டை : மழை வேண்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள்

மழை வேண்டி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வருண பகவானுக்கு கண்ணீர் கொடுத்து பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை : மழை வேண்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள்
x
மழை வேண்டி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வருண பகவானுக்கு கண்ணீர் கொடுத்து பெண்கள்  சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். எம்.குன்னத்தூர் கிராமத்தில் 2 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால், கவலையடைந்த கிராம மக்கள்,அளவீட்டுக் கல்லுக்கு படையலிட முடிவு செய்தனர். அதன்படி கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண்கள் 3 தினங்களாக விரதமிருந்து, தானிய மடிப்பிச்சை எடுத்து, அலங்கரிக்கப்பட்ட கல் தெய்வத்திற்கு நேற்று படையலிட்டு, ஏரியில் ஒப்பாரி வைத்து அழுதபடி வழிபாட்டில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்