வரலாற்று பாரம்பரிய நகரமாக மதுரையை அறிவியுங்கள் - வெங்கடேசன்
மதுரையை வரலாற்று பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையை வரலாற்று பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், மதுரை தமிழ் பண்பாட்டின் தலைநகரம் என்றும், 2 ஆயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை கொண்டுள்ள நகரம் என்றார். இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் தனித்த இடத்தையும் , மனிதகுல பண்பாட்டு வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்பையும் செலுத்திய நகரமாக மதுரை விளங்குவதாகவும் எம்.பி. வெங்கடேசன் சுட்டிக்காட்டினார்.எனவே மதுரையை உலக பாரம்பரிய நகரமாகவும்,வரலாற்றுப் பாரம்பரிய நகரமாகவும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Next Story