திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளைடிக்க முயற்சி - ஆள் நடமாட்டத்தால் மர்ம நபர்கள் தப்பியோட்டம்
திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் ஆள்நடமாட்டம் காரணமாக தப்பி சென்றனர்.
திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் ஆள்நடமாட்டம் காரணமாக தப்பி சென்றனர். ஏ.டி.எம். மையத்த்தின் கண்ணாடிகளை உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது ஏடிஎம் அருகே ஆள்நடமாட்டம் இருந்ததால் கொள்ளையர்கள் சென்று விட்டனர்.இதனால் ஏ.டி.எம்மில் இருந்த பணம் தப்பியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் பாதுகாப்பிற்கு யாரும் இல்லை என்றும், கண்காணிப்பு கேமரா இல்லை என்றும் விசாரணையில்தெரிய வந்துள்ளது.
Next Story