தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர் வார  உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த  அருகே டி.மாணிக்கம்பட்டியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழைக்கு முன்பே குடிமராமத்து பணிகள் நிறைவடைந்த நீர்நிலைகள் தயாரக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்