சிப்காட்டில் குளிர்பான ஆலை அமைக்க அனுமதியை ரத்துசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் புதிதாக குளிர்பான ஆலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிப்காட்டில் குளிர்பான ஆலை அமைக்க அனுமதியை ரத்துசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
x
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கருக்கங்காட்டூர் பகுதியையொட்டி, சிப்காட்டில் தனியார் குளிர்பான நிறுவனம் அமைக்க சுமார் 10 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் மற்றும் குளிர்பான தயாரிப்புக்காக, நாள்தோறும் 3 லட்சம் லிட்டர் குடிநீரை எடுத்து பயன்படுத்த அந்நிறுவனத்திற்கு, பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சுழலில், தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் குளிர்பான ஆலைக்கு வழங்கிய அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் பிரபல குளிர்பான நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பின்னர் அனுமதி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்