திருப்பூர் : கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவில் அருகே உள்ள காந்தி நகரில், தனியாருக்கு சொந்தமான தறிப்பட்டறை உள்ளது.
திருப்பூர் : கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
x
திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவில் அருகே உள்ள காந்தி நகரில், தனியாருக்கு சொந்தமான தறிப்பட்டறை உள்ளது. இந்நிலையில், இங்குள்ள வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த புள்ளிமான் ஒன்று, தறிப்பட்டறை தொழிலாளர்களை கண்டு பயந்து ஓடியபோது, அங்குள்ள கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு, மானை பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து, வரவழைக்கப்பட்ட வனத்துறையினரிடம் மான் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் மானுடன் செல்பி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்