10 ரூபாய் நாணய சர்ச்சை விவகாரம் : சுற்றறிக்கை அனுப்பிய கிளை மேலாளர் தற்காலிக பணி நீக்கம்

10 ரூபாய் நாணயங்களை வாங்குவதை தவிர்க்குமாறு நடத்துனருக்கு சுற்றரிக்கை அனுப்பிய, திருப்பூர் கிளை போக்குவரத்து கழக மேளாலரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
10 ரூபாய் நாணய சர்ச்சை விவகாரம் : சுற்றறிக்கை அனுப்பிய கிளை மேலாளர் தற்காலிக பணி நீக்கம்
x
திருப்பூரில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மக்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்கள் பெறுவதை முடிந்தவரை தவிர்க்கும் படி, நடத்துநர்களுக்கு, திருப்பூர் கிளை போக்குவரத்துக் கழக மேலாளர் தனபால் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த சுற்றறிக்கையானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோவை போக்குவரத்து  கழகம், அந்த சுற்றறிக்கையை ரத்து செய்தது. மேலும் போக்குவரத்து கழகத்திடம் முன் அனுமதி பெறாமல் சுற்றறிக்கை அனுப்பிய கிளை மேலாளர் தனபாலை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்