கல்லூரி மாணவியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் - 4 பேர் கைது

சேலம் ஓமலூர் அருகே குப்பாண்டியூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது உறவினருடன் கடந்த18-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
கல்லூரி மாணவியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் - 4 பேர் கைது
x
சேலம் ஓமலூர் அருகே குப்பாண்டியூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது உறவினருடன் கடந்த18-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய அந்த மாணவியை 5 பேர் கொண்ட ஒரு கும்பல் கத்தி முனையில் மிரட்டி, 10 ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை பறித்து கொண்டதுடன் அந்த கும்பலில் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கும்பலில் உள்ள மற்றவர்களும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த போது அவர் கூச்சலிட்டதை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த கும்பலை சேர்ந்த நான்கு பேரை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்