நடிகர் சங்க தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி ஜூன் 23ம் தேதியன்று நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
x
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை, திட்டமிட்டபடி, ஜூன் 23ம் தேதியன்று நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தேர்தலை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு விசாரித்து வந்தார். இதையடுத்து, வழக்கில் தீர்ப்பளித்த அவர், நடிகர் சங்க தேர்தலை ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 23ம் தேதி நடத்தலாம் எனவும் மறு உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் உத்தர விட்டார். மேலும், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி ஆதிகேசவலு, வழக்கு விசாரணையை வரும் ஜூலை 8ம் தேதி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்