கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடும் சேதத்தினை சந்தித்தன. அதில், முழுதாக சேதமடைந்த ஓட்டு வீடுக்கு அரசு அறிவித்த இழப்பீடு கிடைக்கவில்லை முருகானந்தம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார்,  பல்வேறு இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாதது ஏற்க முடியாது என்று குறிப்பிட்டார்.  இது தொடர்பாக மாநில வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும்,  அதன் அடிப்படையில் அரசு நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். உத்தரவு நிறைவேற்றப்பட்டது  தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்