நடிகர் சங்க தேர்தல் - உறுப்பினர்களை நீக்கிய விவகாரம் : ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது நடிகர் சங்கம்

உறுப்பினர்கள் நீக்கியது தொடர்பான ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சங்கம் தாக்கல் செய்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் - உறுப்பினர்களை நீக்கிய விவகாரம் : ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது நடிகர் சங்கம்
x
நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை, முறையாக தயாரித்து, நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க கோரி ஏழுமலை என்ற உறுப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உறுப்பினர் நீக்கம் தொடர்பான ஆவணங்களை நடிகர் சங்கம் தரப்பு தாக்கல் செய்தது. அவற்றை ஆராய்ந்த நீதிபதி, உறுப்பினர் நீக்கத்திற்கான  நடைமுறை சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாக திருப்தி தெரிவித்தார். மேலும் உறுப்பினர் நீக்கத்துக்கான குற்றச்சாட்டில் முகாந்திரம் ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஏழுமலை தரப்பில், பொது செயலாளர் இல்லாமல் 2018 ஏப்ரலில் செயற்குழு கூட்டம் நடந்ததாகவும், உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமலே நீக்கம் செய்துள்ளதாகவும், அவற்றுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்