திருநங்கைகள் 6 பேர் கடத்தல் - 20 பேர் கொண்ட கும்பலை தேடும் போலீஸ்

குன்றத்தூர் அடுத்த கெழுத்திபேட்டையில் வசித்து வரும் மகாலட்சுமி என்ற திருநங்கை, திருநங்கைகளை கொத்தடிமைகளாக வைத்து, பல்வேறு தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
திருநங்கைகள் 6 பேர் கடத்தல் - 20 பேர் கொண்ட கும்பலை தேடும் போலீஸ்
x
குன்றத்தூர் அடுத்த கெழுத்திபேட்டையில் வசித்து வரும் மகாலட்சுமி என்ற திருநங்கை, திருநங்கைகளை கொத்தடிமைகளாக வைத்து, பல்வேறு தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இது பிடிக்காத ஆறு திருநங்கைகள் அங்கிருந்து தப்பி காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலையில் உள்ள திருநங்கை நகரில் தஞ்சம் அடைந்தனர். இதை அறிந்த மகாலட்சுமி, தொலைபேசியில் ஆறு திருநங்கைகளையும் தொடர்பு கொண்டு தலா 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்ததால், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் குருவிமலைக்கு வந்த 20 பேர் கொண்ட திருநங்கைகள், அந்த ஆறு பேரை காரில் கடத்தி சென்றனர். மேலும், அந்த திருநங்கைகள் தங்கியிருந்த வீட்டில் பொருட்களை சூறையாடிச் சென்றனர். இது தொடர்பாக அங்கு குடியிருக்கும் திருநங்கைகள் புகார் அளித்ததோடு, கடத்தலின் போது சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் போலீசார், கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்