சென்னை பூக்கடை பகுதியில் மிளாய் பொடி தூவி வழிப்பறி செய்த கும்பல் கைது

சென்னை கொத்தவால் சாவடி பாரிமுனை, பூக்கடை பகுதியில் ஒரு கும்பல் மிளாய் பொடி தூவி வழிப்பறி செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது
சென்னை பூக்கடை பகுதியில் மிளாய் பொடி தூவி வழிப்பறி செய்த கும்பல் கைது
x
சென்னை கொத்தவால் சாவடி, பாரிமுனை, பூக்கடை பகுதியில் ஒரு கும்பல் மிளாய் பொடி தூவி வழிப்பறி செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இது தொடர்பாக அமைக்கப் பட்ட பூக்கடை தனிப்படை போலீசார் வாகன சோதனையின் போது 7 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த  கும்பல் தான் சென்னையில் மிளகாய் பொடி தூவி வழிப்பறி செய்தது அப்போது தெரிய வந்தது. இதையடுத்து நாகூர் மீரான், ஆதி, கவுதம், டேனியல் சாலமன், தேவராஜ், ஷாஜகான், அஸ்ருதீன் ஆகிய 7 பேரை   போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், பணம், பட்டா கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஹவாலா பணம் கொண்டு செல்வோரிடம் இவர்கள் கைவரிசை காட்டி வந்ததாகவும், இது குறித்து போலீசுக்கு புகார் வராததால் இந்த கும்பல் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. கைதான 7 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்