சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகை பெட்டி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை
x
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து, நகை பெட்டி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பட்டபகலில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தருண் குமார் என்பவருக்கு சொந்தமான  கடைக்குள் நுழையும் இரு பெண்களுள் ஒருவர்,  தருண்குமாரின் தந்தையிடம் நகை வாங்குவது போல் அவரை திசை திருப்பும் செயலில் ஈடுபடுகிறார். அதனை பயன்படுத்தி இன்னொரு பெண் நகை பெட்டியை எடுத்து கை பைக்குள் வைப்பது கேமிராவில் பதிவாகியுள்ளது. நகை பெட்டிக்குள் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான 150 கிராம் நகை இருந்தது
தெரியவந்துள்ளது. 

ஆர்கே நகரில் நகைக்கடையில் ஒரு கிலோ தங்கம் திருட்டு :



சென்னை ஆர்கே நகரில் நகைக்கடையில் ஒரு கிலோ தங்கம் திருடப்பட்டுள்ளதாக போலீசாரிடம் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். ராம்லால் என்பவருக்கு சொந்தமான நக்கோடா என்ற கடையில் பணிபுரியும், அவரது உறவினரே சிறிது சிறதாக தங்க நகையை திருடி சொந்த ஊருக்கு சென்றுவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசாரிடம் நகை திருடு போனது குறித்து உரிமையாளர் ராம்லால் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் சென்றவரை அறிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு :



நெல்லை  மாவட்டம்  பணகுடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த வளன் என்பவர் நேற்றிரவு காவல்கிணறுக்கு போய்விட்டு பணகுடிக்கு மோட்டார் பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். காவல்கிணறு அருகே வந்துகொண்டிருந்த போது, அவரை வழிமறித்து ஒரு கும்பல் அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துவிட்டு தப்பி சென்றது. இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த பணகுடி போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்