திருப்பூர் தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் பணத்தை சுருட்டிவிட்டு மேலாளர் தலைமறைவு

திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
திருப்பூர் தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் பணத்தை சுருட்டிவிட்டு மேலாளர் தலைமறைவு
x
திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளாவை சேர்ந்த சுரேஷ் கண்ணா என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இக்கிளை கணக்கினை ஆய்வு செய்த அந்நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர் சக்திவேல் வாடிக்கையாளர்களின் பணத்தில் 42 லட்சம் ரூபாயை சுரேஷ்கண்ணா கையாடல் செய்திருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து சக்திவேல் கொடுத்த புகாரின் வழக்குப்பதிவு செய்த போலிசார், தலைமறைவாக உள்ள சுரேஷ்கண்ணாவை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்