டீசலில் மண்ணெண்ணெய் கலப்பு என புகார் : பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

திண்டுக்கலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
டீசலில் மண்ணெண்ணெய் கலப்பு என புகார் : பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்
x
திண்டுக்கலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அங்கு இன்று காலை டீசல் போட்ட ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் ராஜாவின் ஆட்டோ, சிறிது தூரம் சென்றது என்ஜின் பழுதாகி நின்றுள்ளது. பழுது பார்க்கப்பட்ட போது, டீசலில் மண்ணெய் கலந்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் கேட்டதற்கு அவர் சரிவர பதில் அளிக்காததால் கோபமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள், பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்