ஸ்டாலினுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு : ஒரு வழக்கை திரும்பப் பெற்றார் அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி துறையில் முறைகேடுகள் தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை, அமைச்சர் வேலுமணி திரும்ப பெற்றார்.
ஸ்டாலினுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு : ஒரு வழக்கை திரும்பப் பெற்றார் அமைச்சர் வேலுமணி
x
உள்ளாட்சி துறையில் முறைகேடுகள் தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை, அமைச்சர் வேலுமணி திரும்ப பெற்றார். மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய ஸ்டாலின்,  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு பணிகளை தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு  அமைச்சர் வேலுமணி வழங்குவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளில் அதிக ஊழல் நடந்து இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்தாக புகார் எழுந்தது. தமக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யும் ஸ்டாலினுக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவும் கோரியும் அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி  சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி துறை முறைகேடுகள் குறித்து பேச ஸ்டாலினுக்கு தடை கோரிய மனுவை திரும்ப பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி, ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய பிரதான மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்