எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
வருகிற 23 ஆம் தேதி நடிகர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. இங்கு நடத்தப்படும் தேர்தலின் போது பாதுகாப்பு வழங்க உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை நாளை தெரிவிக்க நடிகர் சங்கத்திற்கு உத்தரவிட்டார். எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என கூறிய நீதிபதி நந்தனம் ஒய்.எம்.சி.எ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்ய நடிகர் சங்கத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தினார். அப்போது நடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெகு தொலைவில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலானோர் வர மாட்டார்கள் என்றார். 

அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்த ஆட்சேபம் இல்லை என காவல்துறை தரப்பு கூறியது. விசாரணையின் முடிவில் நடிகர் சங்க  தேர்தலை பற்றி கவலையில்லை என்றும் மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் நீதிபதி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்