புழல் சிறையில் திடீர் சோதனை - விசாரணை கைதியிடம் செல்போன், சிம்கார்டு பறிமுதல்

சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதியிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புழல் சிறையில் திடீர் சோதனை - விசாரணை கைதியிடம் செல்போன், சிம்கார்டு பறிமுதல்
x
சிறைத்துறை அதிவிரைவு படையினர் சென்னை, புழல் சிறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறை கண்காணிப்பு அலுவலகத்தில் பணியாற்றும் விசாரணை கைதி மறைத்து வைத்திருந்த செல்போன், சிம் கார்டு, பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து அந்த கைதியிடம் விசாரணை நடத்திய அதிவிரைவு படையினர் சோதனையின்போது கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். 

இது தொடர்பான அறிக்கையை ஏடிஜிபிக்கு அறிக்கையாக அளித்துள்ளனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது நிலையில் இந்த சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்