பள்ளியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு : 5-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

தாம்பரத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 5 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு : 5-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை
x
தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்கு கூட, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மருத்துவமனைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தண்ணீர் இன்றி வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், கிழக்கு தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் அனுமதி பெற்று, விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதிக மழை பெய்தால் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பள்ளிக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்