'பீரோ புல்லிங்' கொள்ளையன் நாகமணி கைது...

நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளுடன் தலைமறைவாக இருந்த 'பீரோ புல்லிங்' கொள்ளையன் நாகமணி மீண்டும் கைது செய்யப்பட்டான்.
பீரோ புல்லிங் கொள்ளையன் நாகமணி கைது...
x
நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளுடன், தலைமறைவாக இருந்த, 'பீரோ புல்லிங்' கொள்ளையன் நாகமணி மீண்டும் கைது செய்யப்பட்டான். சென்னை அடுத்த மடிப்பாக்கம், தாம்பரம், பள்ளிக்கரனை, சேலையூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், ஜன்னல் வழியாக கம்பி மூலம் பீரோவை இழுத்து, நகை - பணத்தை கொள்ளையடித்து வந்த கொள்ளையன் நாகமணி, மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த நாகமணியை, செஞ்சியில் இருந்து தாம்பரம் வந்த தகவல் அறிந்த சேலையூர் போலீசார், அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து, 117 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 24 வழக்குகளை அவன் மீது பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில், அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்