நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோட்டையூர் பகுதியில், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது, குண்டு வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர். கடந்த 2 தினங்களாக சுமார் 15 க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, வத்திராயிருப்பு போலீசார், அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், வெடி மருந்து சப்ளை செய்தவர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  அதன் அடிப்படையில், பேரையூரை சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்