காரில் இருந்து மனைவியை வெளியே தள்ளிய கணவர் : சிசிடிவி கேமராகவில் பதிவான காட்சிகள்

கோவையில் கணவர் ஒருவர் ஓடும் காரில் இருந்து மனைவியை எட்டி உதைத்து வெளியே தள்ளிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
காரில் இருந்து மனைவியை வெளியே தள்ளிய கணவர் : சிசிடிவி கேமராகவில் பதிவான காட்சிகள்
x
கோவையில் கணவர் ஒருவர் ஓடும் காரில் இருந்து மனைவியை எட்டி உதைத்து வெளியே தள்ளிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. கோவை துடியலூரை அடுத்த குருடம் பாளையத்தை சேர்ந்த அருண் , ஆர்த்தி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இவர்களது விவாகரத்து வழக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சமாதானம் அடைந்த இவர்கள், நிபந்தனைகளுடன் வழக்கை திரும்ப பெற்று சென்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அருண் தனது தந்தை, தாயுடன் வந்து ஆர்த்தியை காரில் அழைத்து சென்றபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,  ஆத்திரமடைந்த அருண் ஆர்த்தியை காரில் இருந்து எட்டி உதைத்துள்ளார். இதில் ஆர்த்தி காரை விட்டு வெளியே விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்