மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னையில் மன வளர்ச்சி குன்றிய சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஷாயின்சா என்ற 45 வயது நபர் மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
இதை அந்த சிறுமியின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் தட்டிக்கேட்டுள்ளனர். இதனையடுத்து தம்மீது புகார் கூறினால் கொலை செய்துவிடுவேன் என ஷாயின்ஷா மிரட்டியதாக கூறப்படும் நிலையில் அவர் மீது காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாகி உள்ள ஷாயின்ஷா மீது எம்.கே.பி. நகர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்