பெரியாறு- வைகை பாசன கால்வாய் அமைக்க வேண்டும் : முதல்வருக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா முல்லைபெரியாறு - வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதி
பெரியாறு- வைகை பாசன கால்வாய் அமைக்க வேண்டும் : முதல்வருக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்
x
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா முல்லைபெரியாறு - வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதி. இங்குள்ள கொட்டாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதனால் தங்கள் பகுதிக்கும், பெரியாறு பாசன கால்வாய் அமைத்துத்தர வலியுறுத்தி சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மேலூர் அருகே சேக்கிபட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்தனர். பின்னர் அவர்கள் முல்லைபெரியாறு பாசன கால்வாய் அமைத்துத் தரக்கோரி, பொதுக்கூட்டம் நடத்தினர். அதில் முதல்வருக்கு மனு எழுதும் கவன ஈர்ப்பு போராட்டம், மாவட்ட ஆட்சியருக்கு நடந்தே சென்று மனு அளிக்கும் கோரிக்கையை முன்வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்