அ.தி.மு.க. தொண்டர்களுக்கு கட்சி தலைமை வேண்டுகோள்

கட்சியின் நிர்வாக முறைகள் மற்றும் தேர்தல் முடிவுகள் பற்றிய தங்கள் கருத்துக்களை பொதுவெளியில் கூறவேண்டாம் என்று தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அ.தி.மு.க. தொண்டர்களுக்கு கட்சி தலைமை வேண்டுகோள்
x
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சி இன்னும் எத்தனை நாளைக்கு என்று எகத்தாளம் பேசியவர்கள் வாயடைக்கும் வகையில் ஜெயலலிதா அமைத்து தந்த அரசை காப்பாற்றி நான்காம் ஆண்டில் வெற்றி நடைபோடுவதாக அதில் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.விசுவாசமிக்க தொண்டர்களை கொண்ட அதிமுகவை கண்டு எதிரிகள் கூட இப்படி இருக்க ஆசைப்பட்டதாக அவர்கள் விவரித்துள்ளனர்.அன்மை காலமாக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் இனி என் செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஊடகங்கள் வாயிலாக நிர்வாகிகள் வெளியிடும் கருத்துக்கள் வரவேற்கதக்கது அல்ல என அதில் வேதனை தெரிவித்துள்ளனர்.கட்டுப்பாடும் ஒழுங்கும் கட்டாயம் தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ள அவர்கள் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களை செயற்குழு பொதுக்குழு மற்றும் ஆலோசனை கூட்டங்களில் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக நினைவுகூர்ந்துள்ளனர்.இனி கட்சியின் நிர்வாக முறை பற்றியோ தேர்தல் முடிவுகள் பற்றியோ பொதுவெளியில் கருத்துக்கள் கூறாமல், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி பணியாற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வமும், பழனிசாமியும் அறிக்கை மூலமாக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்