சிதம்பரம் : காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

சிதம்பரம் நகர காவல் நிலையம் முன்பு இளம்பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் : காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்
x
சிதம்பரம் நகர காவல் நிலையம் முன்பு இளம்பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம்  அருகே ஆட்கொண்டநத்தம் கிராமத்தை சேர்ந்த திவ்யா என்பவரும், கிள்ளை தைக்காலை சேர்ந்த ராஜதீபன் என்பவரும் கடந்த செப்டம்பர் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜ தீபனின் பெற்றோர்கள் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த திவ்யா, சிதம்பரம் நகர காவல் நிலையம் முன்பு வந்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த பெண் போலீசார், திவ்யாவை தடுத்து நிறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்