செங்கல்பட்டு : தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் மரணம்

செங்கல்பட்டில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு : தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் மரணம்
x
செங்கல்பட்டில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி ரேவதி கர்ப்பிணியாக இருந்தார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக சிங்கபெருமாள் கோயில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவர் கருவை கலைத்துவிட அறிவுரை கூறி கருக்கலைப்பு செய்துள்ளனர். இதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு ரேவதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்