மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம் : 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம் : 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
x
3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு பயிற்சி மைய இயக்குநராக எஸ். நாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம். பாலாஜி, பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல, கூடுதல் தலைமை தேர்தர் அதிகாரி வி.ராஜாராமன், நகரம் மற்றும் கிராம திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் , மாவட்ட ஆட்சியர் பொறுப்பை மறு உத்தரவு வரும் வரை கவனிப்பார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்