சொத்து பிரச்சனை காரணமாக நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொத்து தகராறில் தந்தையின் வீட்டில், மகனே நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொத்து தகராறில் தந்தையின் வீட்டில், மகனே நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். துணி வியாபாரியான இவருக்கும் இவரது மகன் விமலுக்கும் இடையே சொத்து பிரிப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சொக்கலிங்கத்தின் புதிய வீட்டுக்கு நள்ளிரவில் மர்ம நபர்களுடன் சென்ற விமல், நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார். பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், வெடிக்காத நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர். மேலும் விமல் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story