பண்ணப்பட்டி அரசு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி மாணவர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ணப்பட்டி அரசு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி மாணவர்கள் போராட்டம்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான தொகையை, கடந்த 2005 -ம்  ஆண்டே அந்த ஊர் மக்கள் செலுத்தியும் தரம் உயர்த்தப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் பள்ளிக்குள் செல்லாமல் வெளியில் அமர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் போலீசார், விரைந்து வந்து பேச்சு நடத்தினர். அப்போது, ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்