காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி இரண்டு பேர் பலி : விடுமுறையை கழிக்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

காவிரி ஆற்றில் குளித்த சிறுமி உள்பட இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி இரண்டு பேர் பலி : விடுமுறையை கழிக்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்
x
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். அவரது மனைவி புவனேஸ்வரி, நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வடகரை ஆத்தூர் பகுதியில் வசிக்கும் தனது தோழி சுமதி வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சுமதியின் மகள் நிஷா, மற்றும் அவரது தோழிகள் மணியனூர் பீச்சப்பாளையத்தைச் கௌசல்யா, இலக்கியச்செல்வி, தேவிகா ஆகியோருடன் சேர்ந்து விடுமுறையை கழிக்க  ஈரோடு மாவட்டம் பாசூர் காவிரி ஆற்றுக்கு  குளிக்கச் சென்றுள்ளார். அங்குள்ள மின் கதவணை அருகில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நிஷாவும், புவனேஸ்வரியும் நீரில் மூழ்கியுள்ளனர். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் கூச்சல் எழுப்ப,  மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் நீரில் மூழ்கியவர்களை தேடினர். அரை மணி நேரத்திற்குப் பின் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்